sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பார்லி. கூட்டத்தொடரின் முதல்நாளிலே எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

/

பார்லி. கூட்டத்தொடரின் முதல்நாளிலே எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

பார்லி. கூட்டத்தொடரின் முதல்நாளிலே எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

பார்லி. கூட்டத்தொடரின் முதல்நாளிலே எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைப்பு


ADDED : டிச 01, 2025 06:34 PM

Google News

ADDED : டிச 01, 2025 06:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

பார்லிமெண்டின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கியது. லோக் சபாவில் எஸ்ஐஆர் நடவடிக்கை குறித்த விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவையை செயல்பட விடாமல், எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பம் எழுப்பியதால் முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் மதியம் 2 மணிக்கு கூடிய போதும் அமளி அடங்கியது. இதையடுத்து, லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் இடைவிடாது அமளியில் ஈடுபட்டு, அவை நடவடிக்கைகளை முடக்கினர். பின்னர், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் காரணமாக ராஜ்யசபாவும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை காலை பார்லி. வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us