தென்மாநில முதல்வர்கள் மாநாடு பெங்களூரில் நடத்த திட்டம்
தென்மாநில முதல்வர்கள் மாநாடு பெங்களூரில் நடத்த திட்டம்
ADDED : ஜன 22, 2026 12:12 AM

பெங்களூரு: ''தென்மாநில முதல்வர்கள் மாநாடு, பெங்களூரில் விரைவில் நடத்தப்படும்,'' என, கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
பெங்களூரில் நேற்று நடந்த சோசலிச மாநாட்டில், முதல்வர் சித்த ராமையா பேசியதாவது:
மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு கிடைக்கும் நிதி குறைந்து விட்டது. தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கும் கர்நாடகாவுக்கே, மத்திய அரசிடம் இருந்து குறைவான நிதி தான் கிடைக்கிறது.
இதை ஜனநாயக ரீதியாக கேள்விக்கு உட்படுத்த வேண்டும். கூட்டாட்சி முறைக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவது பற்றி விவாதிக்க, தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை, விரைவில் பெங்களூரில் நடத்த உள்ளோம்.
'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மானியம் குறைக்கப்பட்டுள்ளது. இது, மாநிலங்களின் பொருளாதாரத்தை பாதிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

