sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

/

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

1


ADDED : ஜூன் 09, 2025 12:43 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 12:43 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மறுவரையறை செய்துள்ளது' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுறும் நிலையில், மத்திய அரசின் ஆட்சி குறித்து நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

கடந்த, 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது.

துாய்மை இந்தியா வாயிலாக கண்ணியத்தை உறுதி செய்வதிலிருந்து, 'ஜன் தன்' எனப்படும் அனைவருக்கும் வங்கி கணக்குகள் திட்டம் வாயிலாக, அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் வரை, பல்வேறு முயற்சிகளால், நம் பெண் சக்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

'உஜ்வாலா' எனப்படும் இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டம், பல வீடுகளுக்கு புகை இல்லா சமையலறைகளை கொண்டு வந்தது, ஒரு மைல்கல் சாதனை.

முத்ரா கடன்கள், லட்சக் கணக்கான பெண்கள் தொழில்முனைவோராகவும், தங்கள் கனவுகளை சுதந்திரமாகத் தொடரவும் உதவியுள்ளன.

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்குவது அவர்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தையைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசிய இயக்கமாக, 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டம் உள்ளது.

அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி, பலரை ஊக்குவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us