sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கதேச எல்லையில் ஊடுருவல் முயற்சி அதிகம்: மத்திய அரசு

/

வங்கதேச எல்லையில் ஊடுருவல் முயற்சி அதிகம்: மத்திய அரசு

வங்கதேச எல்லையில் ஊடுருவல் முயற்சி அதிகம்: மத்திய அரசு

வங்கதேச எல்லையில் ஊடுருவல் முயற்சி அதிகம்: மத்திய அரசு


ADDED : டிச 16, 2025 10:26 PM

Google News

ADDED : டிச 16, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த 2014 ல் இந்திய வங்கதேச எல்லையில் 7,528 முறை ஊடுருவல் முயற்சி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் லோக்சபாவில் அளித்த பதிலில் கூறியதாவது: கடந்த 2014 முதல் இந்திய வங்கதேச எல்லையில் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல் முயற்சி நடந்தது. 2024 வரை 7,528 ஊடுருவல் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் -425,மியான்மர் எல்லையில் -298,நேபாளம் மற்றும் பூடான் எல்லையில் தலா -157 ஊடுருவல் முயற்சி நடந்தது. இந்திய சீன எல்லையில் எதுவும் நடைபெறவில்லை.

2024 ம் ஆண்டில் மட்டும் இந்திய வங்கதேச எல்லையில் அதிகபட்சமாக 977 பேர் ஊடுருவ முயன்றனர். அடுத்த பாகிஸ்தான் எல்லையில் 41 பேர் ஊடுருவ முயன்றனர்.

கைது


2014 முதல் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அதில்

வங்கதேசத்தை சேர்ந்த 18,851 பேரும்

பாகிஸ்தானை சேர்ந்த 556 பேரும்

மியான்மரைச் சேர்ந்த 1165 பேரும்

நேபாளம் மற்றும்பூடான் எல்லையில் 237 பேரும் அடங்குவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், இது குறித்த புள்ளி விவரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us