ADDED : அக் 12, 2025 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தடுக்கச்சேரியில், தேசிய கொடியை சிதைத்து, பாலஸ்தீன கொடியுடன் போஸ்டர் தயாரித்து, பொது இடத்தில் காட்சிப்படுத்தி, சமூக வலைதளங்களில் பரப்பியதாக அப்பகுதி பா.ஜ., வினர் போலீசில் புகார் அளித்தனர்.
கோங்காடு போலீசார் விசாரணையில், தேசிய கொடியை அவமதித்தது அப்பகுதியை சேர்ந்த அத்னான் ஷா, 22, ஹாரீஸ், 27, அக்பர் ஷான் ஆகியோர் என்பது தெரிந்தது. அவர்கள் மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.