sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மருத்துவ மாணவி பலாத்காரம் சக மாணவர்கள் மூவர் கைது

/

மருத்துவ மாணவி பலாத்காரம் சக மாணவர்கள் மூவர் கைது

மருத்துவ மாணவி பலாத்காரம் சக மாணவர்கள் மூவர் கைது

மருத்துவ மாணவி பலாத்காரம் சக மாணவர்கள் மூவர் கைது


ADDED : மே 24, 2025 03:04 AM

Google News

ADDED : மே 24, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிராவில் மருத்துவ மாணவியை சக மாணவர்களே கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த 22 வயது மாணவி, மஹாராஷ்டிராவின் சாங்கிலியில் உள்ள மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 18ம் தேதி இரவில் சாங்கிலியில் உள்ள தியேட்டரில் வகுப்பு தோழர்கள் மூவருடன் சினிமா பார்ப்பதற்காக, அந்த மாணவி சென்றார்.

வழியில், தாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கு மாணவியை அவர்கள் அழைத்து சென்றனர். அங்கு மது அருந்திய மாணவர்கள், மாணவிக்கும் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்தனர்.

இதை குடித்த மாணவி சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். அந்த மாணவியை, நண்பர்கள் மூவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர். இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மாணவியை மிரட்டினர்.

பாதிக்கப்பட்ட மாணவி, இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், கூட்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us