sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

/

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது


ADDED : மார் 16, 2025 11:40 PM

Google News

ADDED : மார் 16, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஹாதேவபுரா: குடித்து விட்டு வாகனம் ஓட்டியதை தட்டி கேட்ட பெண் போலீசை தாக்கியதாக, பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு மஹாதேவபுரா போலீசார், கே.ஆர்., புரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமமூர்த்தி நகரில் இருந்து பெண் தோழியுடன் வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தினர்.

வாகனத்தை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்தார். இதையறிந்த போலீசார், நாளை (நேற்று) காலை போலீஸ் நிலையத்துக்கு வரும்படி தெரிவித்தனர்.

பலமுறை கூறியும், பைக்கை ஓட்டிய ராகேஷ் குமார், அங்கிருந்து நகராமல், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், எஸ்.ஐ., அனிதா குமாரியை தாக்கினார். அங்கிருந்த மற்ற போலீசார், ராகேஷ் குமாரையும், அவரது பெண் தோழியையும் கைது செய்து, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் மீது, பணியில் இருந்த அரசு ஊழியரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us