ADDED : ஜன 13, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுல்தான்பூர்:உத்தர பிரதேசத்தில், கிரைண்டர் கல்லால் அடித்து அத்தையை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம் சுல்தான்பூரை சேர்ந்தவர் அல்தாப். இவரது மனைவி சுபினா, 30. நேற்று முன் தினம் மதியம் அல்தாப் வீடு திரும்பிய போது, சுபினா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அப்போது அவரது மருமகன் ஆரிப், 25, கத்தியுடன் ஓடினார். தகவல் அறிந்து போலீசார் வந்து விசாரித்தனர். பின், சுபினா உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ஆரிப்பை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

