தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/ஓட்டல் மேனேஜ்மென்ட் - துறை அறிமுகம்

ஓட்டல் மேனேஜ்மென்ட் - துறை அறிமுகம்

ஓட்டல் மேனேஜ்மென்ட் - துறை அறிமுகம்


மார் 14, 2009 12:00 AM

மார் 14, 2009 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 14, 2009 12:00 AM மார் 14, 2009 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவீனமயமாகி வரும் இன்றைய உலகில் ஒரு நாட்டின் பொருளாதார வளத்தை அந்த நாட்டின் விருந்தோம்பல் சேவைத் துறையைக் கொண்டு கணக்கிடுவதைக் காண்கிறோம்.

பண்டைய கலாசாரங்களை தங்களது பிரத்யேகமான அடையாளமாகக் கொண்டுள்ள இந்தியா, சீனா, ஈரான் போன்ற நாடுகளைக் காண உலகச் சுற்றுலாப் பயணிகள் விரும்புவதைக் காண்கிறோம். சுற்றுலாத் துறையின் முக்கியமான அங்கமாக விளங்குவது ஓட்டல் மேனேஜ்மென்ட் தான். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் இத் துறை அபரிமிதமாக வளர்ந்து வருவதோடு அதில் பணியாற்ற எண்ணற்ற வாய்ப்புகளையும் தந்து வருகிறது.

நிர்வாகத் திறன், உணவு மற்றும் பானங்களை பரிமாறும் முறைகள், ஹவுஸ்கீப்பிங் திறன், பிரண்ட் ஆபிஸ் பணித் திறன், மார்க்கெட்டிங் மற்றும் அக்கவுண்டிங் திறன் போன்றவற்றை சரியான விகிதத்தில் கற்றுக் கொடுப்பது இத் துறை தான். எனவே தான் இப் படிப்புகளுக்கு இன்று பெரும் வரவேற்பும் மதிப்பும் கிடைக்கிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு தொடர்ந்து ஓட்டல்கள் அதிகரித்து வரும் நிலையில் இத்துறையில் படிப்பும் பயிற்சியும் முடிப்பவர்களுக்கு கிராக்கி உள்ளது. இந்தியாவில் தேசிய ஓட்டல் மேனேஜ்மென்ட் கவுன்சிலின் கீழ் இயங்கிடும் 19 கல்வி நிறுவனங்களிலும் இது தவிர நாட்டில் இயங்கிடும் புகழ் பெற்ற பிற தனியார் ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனங்களிலும் சேர்ந்து படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

டில்லியிலுள்ள ஓபராய் சென்டர் பார் லேர்னிங் அண்ட் டெவலப்மெண்ட், தாஜ் குழுமத்தின் ஐ.ஐ.எச்.எம்., மணிபாலிலுள்ள வெல்கம் குரூப் கிராஜூவேட் ஓட்டல் மேனேஜ்மென்ட் ஸ்கூல் போன்றறை உலகப் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்கள். தனது 90 சீட்களில் சேருவதற்கு 23 ஆயிரம் விண்ணப்பங்களைப் பெறுகிறது ஓபராய் குழுமம்.

கல்விப் பிரிவுகள்
இத்துறையில் 4 முக்கியப் பிரிவுகளில் படிப்பும் பயிற்சியும் தரப்படுகிறது.

பிரண்ட் ஆபிஸ்
ஹவுஸ் கீப்பிங்
புட் அண்ட் பீவரேஜஸ்
கிச்சன்

ஆகிய துறைகளில் சிறப்புப் படிப்பும் பயிற்சியும் பொதுவாக தரப்படுகின்றன. இது தவிர மாணவர்களுக்கு சட்டம், பொருளாதாரம், அக்கவுண்ட்ஸ், நிர்வாகவியல், வெளிநாட்டு மொழி போன்ற பயிற்சிகளும் உண்டு. இது தவிர சேல்ஸ், மார்க்கெட்டிங், பிராக்டிகல் பயிற்சி ஆகியவற்றை துறைப் படிப்புகள் கொண்டுள்ளன.

பொதுவாக இத்துறையின் படிப்புகளில் சேர 12ம் வகுப்பு தகுதி தேவைப்படுகிறது. தேசிய கவுன்சிலின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகளையும் தனியார் கல்வி நிறுவனங்கள் 4 ஆண்டு பட்டப் படிப்புகளையும் நடத்துகின்றன. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், பொது அறிவியல், பொது அறிவு ஆகியவற்றில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவையும் இடம் பெறுகின்றன.

இத்துறையில் ஒருவர் மிளிர்ந்து சிறப்பாக செயல்பட அவர் அடிப்படையில் எளிதில் பழகும் குணாதிசயம் உடையவராகவும் தன்னம்பிக்கை மற்றும் நட்பான குணம் பெற்றவராகவும் இருப்பது முக்கியம். படிக்கும் போது கூட இது போன்ற குணங்களை வளர்த்துக் கொண்டால் போதும். கடின உழைப்பு மற்றும் பொறுமை ஆகிய குணங்களும் ஒருவருக்கு அவசியம் தேவை.

வேலைத் துறைகள்
ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், ஏர்லைன் கேட்டரிங் அண்ட் கேபிள் சர்வீஸ், கிளப் மேனேஜ் மென்ட், குரூயிஸ் ஷிப் மேனேஜ்மென்ட், ஹாஸ்பிடல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங், ஓட்டல் மற்றும் டூரிசம் நிர்வாகம், வன விடுதிகள், விருந்தினர் இல்லங்கள் போன்ற எண்ணற்ற துறைகளில் இத் துறைப் படிப்புகளை முடிப்பவருக்கான வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இப்படிப்புகளை முடிப்பவர்கள் தொடக்கத்தில் பயிற்சியாளர்களாக (டிரெய்னி) பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். பயிற்சி முடிந்தவுடன் தொடக்கத்தில் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பளம் தரப்படுகிறது. மிகச் சிறப்பான திறனைப் பெற்றிருப்பவருக்கு நல்ல சம்பளம் கிடைப்பது எளிதாக இருக்கிறது.

எந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வது?
எத்தனையோ ஓட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் செயல்படுவதால் எதில் சேருவது என்ற குழப்பம் மாணவர்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது. ஆனால் நீங்கள் சேரவிரும்பும் கல்வி நிறுவனமானது அடிப் படை வசதிகளைக் கொண்டதாகவும் சிறப்பான ஆசிரியர்களைக் கொண்டதாகவும் இருப்பது அவசியம். எந்த நிறுவனத்தில் சிறப்பான தகவல் தொடர்புத் திறன்களும் அடிப்படை விருந்தோம்பல் திறன்களும் நல்ல ஆங்கிலத் திறனும் சேர்த்தே கற்றுத் தரப்படுகிறதோ அதுவே நல்ல கல்வி நிறுவனம் என்பதை மாணவர்கள் அறியலாம்.

இதை ஏற்கனவே அந்த நிறுவனத்தில் படித்த மாணவர்களிடம் இருந்து அறியலாம். இந்த அடிப்படையில் முதன்மையானது மதுரையில் இயங்கிடும் சுப்புலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ். பி.எஸ்சி., ஓட்டல் மேனேஜ் மென்ட் மற்றும் கேட்டரிங் சயின்ஸ், சான்றிதழ் படிப்புகளையும் பி.ஜி., டிப்ளமோ படிப்பையும் இது நடத்துகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us