sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் தேசிய, சர்வதேச சிலம்பத்தில் அசத்தல்

நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் தேசிய, சர்வதேச சிலம்பத்தில் அசத்தல்

நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் தேசிய, சர்வதேச சிலம்பத்தில் அசத்தல்


UPDATED : ஜன 13, 2026 08:40 PM

ADDED : ஜன 13, 2026 08:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2026 08:40 PM ADDED : ஜன 13, 2026 08:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்: தேசிய அளவிலான சிலம்ப போட்டி, மதுரை தனியார் பள்ளியில் நடந்தது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பள்ளியை சேர்ந்த மாணவர்கள், இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில், குறிஞ்சி பள்ளியின், 8ம் வகுப்பு மாணவி உமதுாலிகா, 5ம் வகுப்பு மாணவி ரோஷிணி, ஒற்றை கம்பு பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றனர்.

சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி, சென்னை தனியார் பள்ளியில் நடந்தது. உலக அளவில் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.

நாமக்கல் குறிஞ்சி பள்ளியின், 9ம் வகுப்பு மாணவர்கள் ரித்தீஷ் கண்ணன், அபிநீத், 7ம் வகுப்பு மாணவியர் பிரவஸ்தி, கனிஷ்கா ஹரிதா தொடுமுறை சிலம்ப பிரிவில், முதல் மற்றும் மூன்றாமிடம் பிடித்து பதக்கம் வென்றனர்.

தங்கம், வெண்கலம் வென்ற மாணவ மாணவியரை குறிஞ்சி பள்ளி தாளாளர் தங்கவேல் மற்றும் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us