உதவி தொடக்க கல்வி அலுவலக பணியாளர்களுக்கு நிர்வாக பயிற்சி
உதவி தொடக்க கல்வி அலுவலக பணியாளர்களுக்கு நிர்வாக பயிற்சி
UPDATED : செப் 05, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாவட்டம் முழுவதும் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் 120 அலுவலக பணியாளர்களுக்கு சிறப்பு நிர்வாக பயிற்சி, கோவை தடாகம் ரோட்டிலுள்ள பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செப்., 4ம் தேதி துவங்கியது.
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் நாராயணசாமி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி பேசினர்.
தற்போது உதவி தொடக்க கல்வி அலுவலக பணியில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதால், பயிற்சியில் விதிமுறைகள் பற்றி அலுவலர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது.
இப்பயிற்சியை கோவை மாவட்ட கருவூல அலுவலர்கள் கார்த்திகேயன், சரஸ்வதி, தனலட்சுமி ஆகியோர் நடத்தினர். இரண்டாவது நாளாக இப்பயிற்சி 5ம் தேதியும் நடக்கிறது.

