அரசு கல்லுாரி உதவியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
அரசு கல்லுாரி உதவியாளர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : மார் 20, 2026 03:00 PM
ADDED : மார் 20, 2026 03:02 PM
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரி திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில், முதல்வர் ஆராய்ச்சி நிதி திட்டத்தில் பணியாற்றுவதற்காக, வேதியியல் துறைக்கு ஒரு புராஜெக்ட் அசிஸ்டண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மாத ஊதியம் 25 ஆயிரம் வழங்கப்படும்.
இப்பணியில் சேர விரும்புவோர், விண்ணத்தை வரும் 23ம் தேதி மாலை 05:00 மணிக்குள், விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பேராசிரியர் வைத்தியநாதன், வேதியியல் துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரி, விழுப்புரம் 605602. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான நேர்காணல் 23ம் தேதியே நடைபெறும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

