sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்துக்கு தங்க விருது

/

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்துக்கு தங்க விருது

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்துக்கு தங்க விருது

என்.எல்.சி., இந்தியா நிறுவனத்துக்கு தங்க விருது


UPDATED : ஜன 12, 2026 01:46 AM

ADDED : ஜன 12, 2026 01:46 PM

Google News

UPDATED : ஜன 12, 2026 01:46 AM ADDED : ஜன 12, 2026 01:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி: புதுடில்லியில் நடந்த, மாநாட்டில் நிதிச்செயல் திறனுக்கான 'ஸ்கோச் தங்க விருது' என்.எல்.சி., இந்தியா நிறுவனத்துக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

புதுடில்லி இந்தியா ஹாபிடேட் சென்டரில் நேற்று 'வளர்ச்சியடைந்த பாரதத்தை நிர்வகித்தல்' என்ற கருப்பொருளில் 105வது ஸ்கோச் மாநாடு நடந்தது.

இம்மாநாட்டில், என்.எல்.சி., இந்தியா நிறுவனத்துக்கு, நிதி செயல்திறனில் சிறந்து விளங்கியதற்காக மதிப்புமிக்க 'ஸ்கோச் தங்க விருது' வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருதினை பெற்றுக்கொண்ட என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசியதாவது:

ஸ்கோச் விருதுகளிலேயே மிக உயரிய பிரிவான இந்த தங்க விருது, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் வலுவான நிதி அடிப்படைகள், விவேகமான நிதி மேலாண்மை, செயல்பாட்டுத் திறன் மற்றும் பங்குதாரர்களுக்கான நிலையான மதிப்பினை உருவாக்கியமை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

சவால்கள் நிறைந்த தற்போதைய சூழலிலும், கட்டுக்கோப்பான மூலதன ஒதுக்கீடு, செலவின மேம்பாடு, வலுவான நிர்வாக நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான செயல்பாட்டு மேன்மை ஆகியவற்றின் மூலம் நிறுவனம் தனது நிதி வலிமையை நிரூபித்துள்ளது.

இந்த தங்க விருது, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீண்ட கால நிலையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த உயரிய விருது, என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த குடும்பத்தின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

நிறுவனத்தின் நிதி வலிமை மற்றும் செயல்பாட்டுத் திறனுக்கு முதுகெலும்பாகத் திகழும் எமது பணியாளர்களின் அர்ப்பணிப்பு, தொழில்முறைத் திறன் மற்றும் நேர்மைக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்.

அத்துடன், பணியாளர்கள் முழு கவனத்துடன் பணியாற்றத் துணையாக இருக்கும் அவர்களது குடும்பத்தினரின் ஆதரவையும் தியாகங்களையும் நன்றியுடன் இத்தருணத்தில் பதிவு செய்கிறேன்.

இவ்வாறு சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசினார்.






      Dinamalar
      Follow us