sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரியில் தாய்மொழி தினம்

/

கல்லுாரியில் தாய்மொழி தினம்

கல்லுாரியில் தாய்மொழி தினம்

கல்லுாரியில் தாய்மொழி தினம்


UPDATED : மார் 29, 2024 12:00 AM

ADDED : மார் 29, 2024 10:52 AM

Google News

UPDATED : மார் 29, 2024 12:00 AM ADDED : மார் 29, 2024 10:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உலகத் தாய்மொழி தினம் மற்றும் தளிர் என்ற மாணவர் கையெழுத்துப்பிரதி வெளியீட்டு விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்லுாரியின் முதல்வர் முத்துலட்சுமி தளிர் என்ற மாணவர்களின் கையெழுத்துப்பிரதி இதழை வெளியிட்டு வாழ்த்தி பேசினார். தளிர் என்ற இதழ் மாணவர்களின் கையெழுத்தில் அமைந்த கவிதைகள், கட்டுரைகள், ஓவியம், மருத்துவ குறிப்புகள், பொது அறிவு தகவல்கள், தாய்மொழி, தமிழ்நாடு, இந்தியா, உலகம் குறித்த பல்சுவை தகவல்களைக் கொண்ட கையெழுத்துப்பிரதி ஆகும்.
உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் கவியரங்கம், மேடைப்பேச்சு, குழுவிவாதம் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவியம், மீம்ஸ், குழுவிவாதம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்த்துறை தலைவர் முனைவர் வனிதா நோக்கவுரை ஆற்றினார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் வனிதா, ராஜேந்திரன், புனிதவதி ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us