sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிக்கு சென்ற 2 சகோதரிகள் மாயம்

/

பள்ளிக்கு சென்ற 2 சகோதரிகள் மாயம்

பள்ளிக்கு சென்ற 2 சகோதரிகள் மாயம்

பள்ளிக்கு சென்ற 2 சகோதரிகள் மாயம்


UPDATED : அக் 25, 2025 09:52 AM

ADDED : அக் 25, 2025 09:53 AM

Google News

UPDATED : அக் 25, 2025 09:52 AM ADDED : அக் 25, 2025 09:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்:
பள்ளிக்கு சென்ற இரண்டு சகோதரிகள் மாயமானதால் பெற்றோர் கலக்கம் அடைந்துள்ளனர்.

கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின், முத்தியாளபேட் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ். இவருக்கு மோனிகா, 14, தனுஸ்ரீ, 11, என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் முல்பாகலில் உள்ள, ஞானவாஹினி பள்ளியில் படித்து வந்தனர்.

நேற்று காலை சகோதரிகள் இருவரும், பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆனால் பள்ளிக்கு செல்லவில்லை என, தந்தைக்கு தகவல் வந்தது. சிறுமியர் வீட்டுக்கும் திரும்பவில்லை. கலக்கமடைந்த பெற்றோர், கிராமத்தின் சுற்றுப்பகுதி, பள்ளியின் சுற்றுப்பகுதிகளில் தேடியும், அவர்களை பற்றி தகவல் இல்லை.

பள்ளிக்கு சென்ற சிறுமியர், மர்மமான முறையில் மாயமாகி உள்ளனர். அவர்களாகவே எங்கோ சென்றனரா அல்லது யாராவது கடத்திச் சென்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us