sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

விரல்மை, நம்வலிமை விழிப்புணர்வு கல்லுாரி மாணவியர் 2,000 பேர் பங்கேற்பு

/

விரல்மை, நம்வலிமை விழிப்புணர்வு கல்லுாரி மாணவியர் 2,000 பேர் பங்கேற்பு

விரல்மை, நம்வலிமை விழிப்புணர்வு கல்லுாரி மாணவியர் 2,000 பேர் பங்கேற்பு

விரல்மை, நம்வலிமை விழிப்புணர்வு கல்லுாரி மாணவியர் 2,000 பேர் பங்கேற்பு


UPDATED : ஏப் 04, 2024 12:00 AM

ADDED : ஏப் 04, 2024 09:00 AM

Google News

UPDATED : ஏப் 04, 2024 12:00 AM ADDED : ஏப் 04, 2024 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், விரல்மை, நம்வலிமை என்பதை வலியுறுத்தும் வகையில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் உமா தலைமை வகித்தார். தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர், தேர்தல் போலீஸ் பார்வையாளர் உஷா ராதா, தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜூன் பேனர்ஜி, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், வரும், 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2,000-க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியர் கலந்து கொண்ட, விரல்மை, நம்வலிமை என்பதை வலியுறுத்தும் வகையில், ஓட்டுப்போடும் முத்திரையில், ஒருசேர நின்று ஓட்டுப்போடுவதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, தாசில்தார் சீனிவாசன், நகராட்சி கமிஷனர் சென்னு கிருஷ்ணன், ரெட்கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன், கல்லுாரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us