UPDATED : ஜூன் 08, 2024 12:00 AM
ADDED : ஜூன் 08, 2024 07:36 PM
கோவை:
பள்ளிகள் திறப்பு மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக,50 அரசு பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இயக்குகிறது.
இது குறித்து தமிழக அரசு போக்குவரத்து கழக கோவை மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பள்ளிகள் திறப்பு மற்றும் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு நாட்களில் வெளியூர் சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டலம், 50 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மதுரை, தேனி, திருச்சி, சேலம் போன்ற ஊர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களை விட கூடுதலாக 50 பஸ்கள் கோவையிலிருந்து இயக்கப்படுகிறது.
பயணிகள் நெரிசலை குறைக்கவும், கடைசி நேரத்தில் காத்திருப்பதை தவிர்க்கவும், அரசு போக்குவரத்துக்கழக வருவாய் பெருக்கவும், மக்கள் பயன்பாட்டிற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.