sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிக்கு வராத மாணவருக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் வரவழைக்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை

/

பள்ளிக்கு வராத மாணவருக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் வரவழைக்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை

பள்ளிக்கு வராத மாணவருக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் வரவழைக்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை

பள்ளிக்கு வராத மாணவருக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் வரவழைக்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை


UPDATED : மே 03, 2024 12:00 AM

ADDED : மே 03, 2024 12:26 PM

Google News

UPDATED : மே 03, 2024 12:00 AM ADDED : மே 03, 2024 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, ஆலோசனை வழங்கி, மீண்டும் வரவழைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என நாமக்கல் கலெக்டர் உமா கூறினார்.

நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், 2023 - 24ம் கல்வியாண்டில், அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பள்ளி செல்லாத குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பள்ளி செல்லாத குழந்தைகள் திட்ட கூறின் கீழ், இதுவரை, 126 மாணவ, மாணவியர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 45 மாணவ, மாணவியர் விருப்பமின்மை காரணமாக பள்ளிக்கு வரவில்லை. மேற்படி விருப்பமின்மை காரணமாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆற்றுப்படுத்துனர் மூலம், ஆலோசனை வழங்கி பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வட்டார கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பயிற்றுனர்களின் பள்ளி செல்லாத குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கான பணி முன்னேற்ற அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க உள்ளது. அதனால், அனைத்து அலுவலர்களும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று, ஆலோசனை வழங்கி, குழந்தைகளை பள்ளிக்கு மீண்டும் வரவழைக்க அனைத்து பணிகளையும் தொய்வின்றி சேவை மனப்பான்மையுடன் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us