sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை

/

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை


UPDATED : ஜூன் 03, 2025 12:00 AM

ADDED : ஜூன் 03, 2025 10:05 AM

Google News

UPDATED : ஜூன் 03, 2025 12:00 AM ADDED : ஜூன் 03, 2025 10:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதி அங்கன்வாடி மையங்களிலும், குழந்தைகள் சேர்க்கை நேற்று நடந்தது.

உடுமலையில் 138, குடிமங்கலத்தில் 75 மற்றும் மடத்துக்குளத்தில் 77 அங்கன்வாடி மையங்களும் உள்ளன. அங்கன்வாடி மையங்களில் இரண்டு முதல் ஐந்து வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு அந்தந்த பகுதி அங்கன்வாடி மையங்களிலிருந்து தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகள், ஊட்டச்சத்து உணவுபொருட்கள் வழங்குவதும் நடக்கிறது.

மேலும், குழந்தைகளுக்கு ஒரு வயது முதல் இரண்டு வயது வரை அவர்களுக்கான சத்துமாவு, முட்டை மையத்தின் சார்பில் வழங்கப்படுகிறது.

கல்வியாண்டு துவக்கம் என்றில்லாமல், இரண்டு வயது நிறைவுபெறும் குழந்தைகளை, அங்கன்வாடி பணியாளர்கள் மையங்களில் சேர்க்கை செய்து பராமரிக்கப்படுகின்றனர். இருப்பினும், புதிய கல்வியாண்டையொட்டி நேற்றும் அங்கன்வாடி மையங்களில் சேர்க்கை நடந்தது. குழந்தைகளுக்கு சிறிய பரிசு பொருட்கள், பலுான்கள், இனிப்புகள் வழங்கி அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளை வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us