சிதம்பரம் பல்கலைக்கழக நுாலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
சிதம்பரம் பல்கலைக்கழக நுாலகத்துக்கு ஐ.எஸ்.ஓ., தரச்சான்று
UPDATED : பிப் 26, 2026 02:49 PM
ADDED : பிப் 26, 2026 02:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக நுாலகத்திற்கு, சர்வதேச மன்றம் சார்பில், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராமசாமி ஐயர் நுாலகம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டு, நவீன தானியங்கி முறையில் செயல்பட்டு வருகிறது. நுாலகத்தின் சிறந்த சேவை பராமரிப்பிற்காக, சர்வதேச அங்கீகார மன்றத்தால், ஐ.எஸ்.ஓ., தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
தரச்சான்றிதழை பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடைநம்பி மற்றும் பதிவாளர் சிங்காரவேல் ஆகியோர் வழங்கினர். நுாலக பணியாளர்கள் சார்பாக நுாலகர் மற்றும் பேராசிரியர் விஜயகுமார், நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை தலைவர் சிவராமன், உதவி நுாலகர் பாலகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியர் ஜெகன் ஆகியோர் பெற்று கொண்டனர்.

