தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எஸ்.ஐ., தேர்விற்கு எதிரான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

எஸ்.ஐ., தேர்விற்கு எதிரான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

எஸ்.ஐ., தேர்விற்கு எதிரான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு


UPDATED : பிப் 26, 2026 02:54 PM

ADDED : பிப் 26, 2026 02:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2026 02:54 PM ADDED : பிப் 26, 2026 02:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
எஸ்.ஐ., தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த தாக்கலான வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தென்காசி குருசாமி உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு:
எஸ்.ஐ., பணியிடங்களுக்கான தேர்வு 2025 டிச., 21ல் நடந்தது. பங்கேற்றோம். பிரிவு 'பி' பகுதியில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு தமிழ் வினாக்கள் இடம்பெறவில்லை. பதிலாக உளவியல் பகுதியிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாக இடம்பெற்றன. இது ஏற்புடையதல்ல. எஸ்.ஐ., தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். தேர்வை ரத்து செய்து, புதிதாக நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

அரசு தரப்பு:
தமிழ் தகுதி தேர்வில் 100 வினாக்கள் இடம்பெற்றன.

நீதிபதி:
தேர்வு பாடத்திட்டப்படி தமிழில் ஒரு வினா கூட இடம்பெறவில்லை. ஒரு மதிப்பெண் கூட தேர்வு முடிவை மாற்றலாம். தேர்வு முடிவுகளை 10 நாட்களுக்கு வெளியிட வேண்டாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us