sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

போட்டா - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

/

போட்டா - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போட்டா - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

போட்டா - ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


UPDATED : ஏப் 04, 2025 12:00 AM

ADDED : ஏப் 04, 2025 09:41 AM

Google News

UPDATED : ஏப் 04, 2025 12:00 AM ADDED : ஏப் 04, 2025 09:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
போட்டா ஜியோ (அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு) சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், சரண்விடுப்பு ஒப்படைப்பினை நடப்பாண்டு ஏப்., 1 முதல் அமல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய 7வது ஊதிய குழு நிர்ணயம் செய்த போது, 21 மாத நிலுவை தொகையினை வழங்குதல், சத்துணவு அங்கன்வாடி பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளிலும் பணிபுரியும் பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலிபணியாளர்கள், பகுதி நேர பணியாளர்கள் எதிர்கால வாழ்வாதாரம் கருதி பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் முரளி தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டா ஜியோ மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் கோரிக்கை விளக்கப்பேருரை நிகழ்த்தினார். திரளான அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us