sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு

/

அரசு கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு

அரசு கல்லுாரியில் திருக்குறள் கருத்தரங்கு


UPDATED : ஜன 10, 2026 04:00 PM

ADDED : ஜன 10, 2026 04:05 PM

Google News

UPDATED : ஜன 10, 2026 04:00 PM ADDED : ஜன 10, 2026 04:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், திருக்குறளின் உயர்வு குறித்த, 7 நாள் கருத்தரங்கு துவங்கி நடந்து வருகிறது.



காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், கன்னியாகுமரியில் அமைக்கப்பட்ட 133 அடி திருவள்ளுவர் சிலையின், 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி, திருக்குறளின் உயர்வு குறித்து, 8 அமர்வுகளில் கருத்தரங்கு துவக்க விழா நடந்தது.



இதில், திருக்குறள் தொடர்பாக மாணவர்கள் பங்கேற்கும் வினாடி வினா, விவாத மேடை, கட்டுரைப் போட்டிகள் கடந்த 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.




தினமும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் துவக்க விழாவிற்கு, முதல்வர் மீனா தலைமை தாங்கினார். தமிழ் துறைத் தலைவர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சிற்றரசு வரவேற்றார்.




அண்ணாமலைப் பல்கலை மொழியியல் உயராய்வுத்துறை இயக்குநர் பேராசிரியர் சந்திரமோகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 'மொழியியல் நோக்கில் திருக்குறள் சொற்பொருள் உறவுகள்' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். கவுரவ விரிவுரையாளர் பாக்கியராஜ் நன்றி கூறினார். நிகழ்வில், மாணவ மாணவிகள் திருக்குறள் குறித்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.




வரும், 12 ம் தேதி வரை கருத்தரங்கு நடக்கிறது.








      Dinamalar
      Follow us