UPDATED : மார் 17, 2026 03:21 PM
ADDED : மார் 17, 2026 03:22 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
தேர்வு மைய குளறுபடி காரணமாக, கடந்த பிப். 8ல் நடந்த தேர்வு, ஒத்திவைக்கப்பட்டது; அந்த தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 365 பேர் ஹால்டிக்கெட் பெற்றிருந்தனர்.
இவர்களில், 181 பேருக்கான தேர்வு, காலை 09:30 முதல் மதியம், 12:30 மணி வரை நடைபெற்றது. 12 பேர் ஆப்சென்ட் ஆகினர். 169 பேர் தேர்வு எழுதினர்.
மதியம் 02:30 முதல் மாலை, 05:30 மணி வரை நடந்த தேர்வை, 184 பேரில், 169 பேர் எழுதினர்; 15 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
