sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வரலாறு என்பது உண்மையாக இருக்க வேண்டும்

/

வரலாறு என்பது உண்மையாக இருக்க வேண்டும்

வரலாறு என்பது உண்மையாக இருக்க வேண்டும்

வரலாறு என்பது உண்மையாக இருக்க வேண்டும்


UPDATED : மே 03, 2024 12:00 AM

ADDED : மே 03, 2024 07:45 AM

Google News

UPDATED : மே 03, 2024 12:00 AM ADDED : மே 03, 2024 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அதிகாரம் உள்ளது என்பதற்காக தங்களுடைய தலைவரின் வரலாற்றை பதிவு செய்வது அதிகார துஷ்பிரயோகம் என்று தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பத்தாம் வகுப்பு புத்தகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரலாறு, பன்முக கலைஞர் என்ற தலைப்பில், கலைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வரலாறு என்பது உண்மையை மட்டும் பதிவு செய்யக்கூடியதாக இருக்க வேண்டும்.
அதிகாரம் உள்ளது என்பதற்காக, தங்கள் தலைவரின் வரலாற்றை பதிவு செய்வது அதிகார துஷ்பிரயோகமே. பல்வேறு அரசியல் தலைவர்கள் குறித்து, பல்வேறு தளங்களில் நல்லதையும், கெட்டதையும் கூட பதிவு செய்துள்ளனர். கண்ணதாசனின் 'வனவாசம்' புத்தகம் ஒரு பெரிய உதாரணம் என்பதை, தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் அதிகாரத்தை முறையாக செலுத்த வேண்டும். இல்லையேல், அது நம்மையே தாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us