sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

உதயமாகிறது தேசிய காவல்துறை பல்கலைக்கழகம்

/

உதயமாகிறது தேசிய காவல்துறை பல்கலைக்கழகம்

உதயமாகிறது தேசிய காவல்துறை பல்கலைக்கழகம்

உதயமாகிறது தேசிய காவல்துறை பல்கலைக்கழகம்


UPDATED : ஆக 25, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 25, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சட்டம் ஒழுங்கு மேம்பாட்டுக்கு உதவக் கூடிய வகையில் படிப்புகளையும் சிறப்புப் பயிற்சிகளையும் தரவிருக்கும் தேசிய காவல்துறைப் பல்கலைக்கழகம் ஒன்று விரைவில் துவங்கப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது 2010ம் ஆண்டிலிருந்து செயல்படத் துவங்கும்.
பயாலஜிக்கல் வார்பேர் எனப்படும் உயிரியல் போர் முறைகள், சிக்கல் தீர்ப்பு மேலாண்மை, தடயவியல், தீவிரவாதம் ஆகியவற்றில் இந்த பல்கலைக்கழகம் சர்வதேசத் தரத்திலான ஆய்வு மற்றும் சிறப்புப் பயிற்சிகளை வழங்கிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு குறித்த உக்தி மையமாக இது செயல்படும். பல்வேறு மாநிலங்களிலுள்ள போலீஸ் பயிற்சி மையங்கள், போலீஸ் அகாடமிக்கள், பாராமிலிடரி பயிற்சி மையங்கள் ஆகியவை இந்த பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டு இதன் கீழ் இயங்கிடும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள், பொருளாதாரக் குற்றங்கள், தீவிரவாதம், விசாரணை, சைபர் குற்றங்கள், வி.ஐ.பி.பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகளை இந்த பல்கலைக்கழகம் தந்திடும்.
பட்ட மேற்படிப்பளவில் இந்த பல்கலைக்கழகமானது போலீஸ் சயின்ஸ் படிப்பைத் தரவிருக்கிறது. இந்திய போலீஸ் துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அத்தனை அம்சங்களும் இந்தப் படிப்பில் தரப்படும்.
இந்தியாவில் தோராயமாக 25 லட்சம் போலீசார் உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். தேசிய போலீஸ் பல்கலைக்கழகத்தில் படித்து முடிப்பவருக்கு பாதுகாப்புப் படைகள், பாராமிலிடரி படைகள் மற்றும் போலீஸ் பிரிவுகளில் பணி பெற முன்னுரிமை தரப்படவுள்ளது.






      Dinamalar
      Follow us