UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM
ADDED : ஜூலை 26, 2013 07:58 AM
தயா கல்லூரி அலுவலக மேலாளர் ஜெயகரன் கிரப் தாக்கல் செய்த மனு: தயா கல்லூரிக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது. அண்ணா பல்கலை தற்காலிக இணைவிப்பு வழங்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு செய்தோம்.
நீதிபதிகள், "பல்கலை நிர்வாகம், ஆய்வுக் குழுவை அனுப்பி அடிப்படை வசதிகள் உள்ளனவா என, ஆய்வு செய்ய வேண்டும்; 10 நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என ஜூலை 3ம் தேதி, உத்தரவிட்டனர்.
பல்கலைகுழு, ஜூலை 11ம் தேதி, ஆய்வு செய்தது. மதுரை கலெக்டரின் கடிதம் அடிப்படையில், இணைவிப்பு வழங்க பல்கலை பதிவாளர் மறுத்து விட்டார். இதை எதிர்த்து, ஏற்கனவே, ஐகோர்ட்டில் மனு செய்தது, நிலுவையில் உள்ளது.
ஐகோர்ட் உத்தரவை, பதிவாளர் கணேசன் நிறைவேற்றவில்லை. அவர் மீது, கோர்ட் அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இம்மனு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால், விசாரணைக்கு வரவில்லை.
