நரிக்குறவர், சீர்மரபினர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற அழைப்பு
நரிக்குறவர், சீர்மரபினர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெற அழைப்பு
UPDATED : ஆக 16, 2014 12:00 AM
ADDED : ஆக 16, 2014 12:56 PM
மதுரை: நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர்கள், அரசு நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம்.
இவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக 10, பிளஸ் 1 படிக்கும் மாணவியர், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. ஆயிரம், பிளஸ் 2 படிக்கும் மாணவியர் மற்றும் தேர்ச்சி பெற்றவருக்கு ரூ. 1500, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்கல்வி படிப்பு, ஐ.டி.ஐ., படிப்பு, மற்றும் திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித் தொகை, மூக்கு கண்ணாடி செலவு தொகை, முதியோர் ஓய்வூதியம் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ், மரணம், காயம் ஏற்பட்டால் அவற்றின் தன்மைக்கேற்ப உதவித் தொகை வழங்கப்படும்.
இறப்பின்போது இயற்கை மரணம், ஈமச்சடங்கு உதவித் தொகையும் வழங்கப்படும். இவற்றை பெற, வாரிய உறுப்பினராக பதிவு பெறத்தகுதியுள்ளவர் என சீர்மரபினர், நரிக்குறவர் என சாதிச்சான்றை வி.ஏ.ஓ.,விடம் பெற்று, நலத்திட்டத்திற்கான படிவத்தில் தகுந்த சான்றுகளுடன் பூர்த்தி செய்து, பிற்பட்டோர் நலஅலுவலரிடம் வழங்க வேண்டும் என கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
