தினமலர் செய்தியால் பள்ளிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை
தினமலர் செய்தியால் பள்ளிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை
UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 11:24 AM
அ நிறம் | அளவு
ரிஷிவந்தியம்: தினமலர் செய்தி எதிரொலியால் பழைய சிறுவங்கூர் நடுநிலைப் பள்ளிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரிஷிவந்தியம் அடுத்த பழையசிறுவங்கூர் நடுநிலைப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கேற்ப தண்ணீர் வசதி இல்லாததால் இடைவெளி நேரங்களில் மாணவர்கள் சாலையை கடந்து தண்ணீர் பிடிக்கவும், சிறுநீர் கழிக்க செல்லும் அவல நிலை நீடித்து வந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நடுநிலை பள்ளிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தும் பணி, துரிதமாக நடந்தது வருகிறது. பணிகளை ஊராட்சி தலைவர் தேவராஜ், நேரில் பார்வையிட்டார்.
