sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

350 டன் பாட புத்தகத்தை விற்ற மோசடி; ஒருவர் கைது

/

350 டன் பாட புத்தகத்தை விற்ற மோசடி; ஒருவர் கைது

350 டன் பாட புத்தகத்தை விற்ற மோசடி; ஒருவர் கைது

350 டன் பாட புத்தகத்தை விற்ற மோசடி; ஒருவர் கைது


UPDATED : நவ 06, 2014 12:00 AM

ADDED : நவ 06, 2014 11:59 AM

Google News

UPDATED : நவ 06, 2014 12:00 AM ADDED : நவ 06, 2014 11:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில், 350 டன் எடையுள்ள பள்ளி பாட புத்தகத்தை விற்று மோசடி செய்ததாக, முதன்மை கல்வி அலுவலக ஊழியர், நேற்று கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக, 2011ல், சமச்சீர் கல்வி அல்லாத, 350 டன் பழைய பாடத்திட்ட புத்தகங்கள், லாரிகளில் கொண்டு வரப்பட்டன.

அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில், ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புலியகுளம் ஆர்.சி.ஆண்கள் பள்ளி யில் வைக்கப்பட்டு இருந்த, இப்பாட புத்தகங்கள் காணாமல் போனது. இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பாட புத்தகங்களை விற்று பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின்படி, முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி, போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சி.இ.ஓ., அலுவலக இளநிலை உதவியாளர் சரவணன், போலீஸ் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்தார். கோவைக்கு நேற்று அவர் வந்த போது, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us