இந்தியா பிச்சைக்காரர்களில் படித்தவர்கள் தான் அதிகம்
இந்தியா பிச்சைக்காரர்களில் படித்தவர்கள் தான் அதிகம்
UPDATED : டிச 30, 2015 12:00 AM
ADDED : டிச 30, 2015 10:22 AM
2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 3.72 லட்சம் பேர் பிச்சைக்காரர்களாக உள்ளனர். இவர்களில் அதிகம் படித்தவர்கள் தான். படிப்பிற்கு ஏற்க வேலை கிடைக்காதது, அதில் போதிய வருமானம் கிடைக்காதது, வேலை பறிபோனது உள்ளிட்டவைகள் தாங்கள் பிச்சை எடுக்க வந்ததற்கு காரணமாக அவர்கள் கூறுகிறார்கள்.
தான் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையில் ஒரு நாளைக்கு ரூ.100 மட்டுமே வருமானம் கிடைத்ததாகவும், தற்போது நாள் ஒன்றிற்கு ரூ.200 கிடைப்பதாக கூறுகிறார், மருத்துவமனையில் வார்ட் பாயாக இருந்த பிச்சைக்காரரான ஒருவர். இவர் 12ம் வகுப்பு படித்துள்ளாராம். தனது பார்வை பறிபோனதால் வேலை போய் விட்டதால் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் தொழிலுக்கு வந்து விட்டதாக கூறுகிறார் மற்றொருவர். இவருக்கு 9 பெண் குழந்தைகள் உள்ளனர்.
