சிறந்த இளைஞர் மன்ற விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறந்த இளைஞர் மன்ற விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : ஜன 21, 2016 12:00 AM
ADDED : ஜன 21, 2016 09:58 AM
புதுச்சேரி
:
நேருயுவக்கேந்திரா சார்பில், சிறந்த இளைஞர் மன்ற விருதுக்கான,
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி
நேருயுவக்கேந்திரா இளையோர் ஒருங்கிணைப்பாளர் சேஷாத்திரி விடுத்துள்ள
செய்திக்குறிப்பு:
இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், புதுச்சேரி நேரு யுவக்கேந்திரா மூலம், மாவட்ட அளவில் சிறப்பாக சேவை செய்யும் சிறந்த இளைஞர் மன்றத்தை
தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் விருது வழங்கி வருகிறது.
அதே போல் 2014-15ம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட இளைஞர் மன்ற விருதிற்கு, புதுச்சேரியில் செயல்படும் அனைத்து பதிவு பெற்ற நேரு
யுவக்கேந்திராவில் இணைந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்றங்கள் விண்ணப்பிக்கலாம்.1.4.2014 முதல் 31.3.2015 வரை மன்றத்தின் மூலம் மேற்கொண்ட
பணிகள் மட்டுமே விருதிற்கு பரிசீலக்கப்படும். மாவட்ட சிறந்த இளைஞர் மன்ற விருது
ஒரு அமைப்பிற்கு மட்டுமே வழங்கப்படும். அதனுடன், 25 ஆயிரம் ரூபாய்க்கு காசோலையும், சான்றிதழும் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் எண், 41, வெங்கட சுப்பா ரெட்டியார் தெரு, 100 அடி சாலை, எல்லைப்பிள்ளைச்சாவடி, என்.டி. மகால் அருகில், புதுச்சேரி 605-005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது சுய விலாசமிட்ட 5 ரூபாய் அஞ்சல் தலை ஒட்டப்பட்ட, அஞ்சல் உரையுடன் வேண்டுகோள் கடிதம் அனுப்பியோ பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்தவிண்ணபங்கள் வரும் 28 ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அலுவலகத்தில் தேவையான சான்றிதழ்களும் சமர்பிக்க வேண்டும்.
