UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 04:44 AM
அ நிறம் | அளவு
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், மத்திய அரசுப் பணி தேர்வு எழுதுவோருக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கின. பயிற்சி பெறும் மாணவ - மாணவியருக்கு அமைச்சர் உதயநிதி, இலவச பயிற்சி கையேடுகளை வழங்கினார்.அவர் பேசியதாவது:
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சியில் பங்கேற்க 26,000 மாணவர்கள் ஆன்லைன் வழியில் விண்ணப்பித்தனர். 6,900 பேர் தேர்வாகினர். இந்த பயிற்சியில் சேர்ந்துள்ளவர்கள் கடும் முயற்சியுடன் படித்து மத்திய அரசுப் பணிகளைப் பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
