UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 04:50 AM
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் செயல்படும், தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை இடங்கள் பகிர்ந்தளிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில் நடந்தது.கூட்டத்திற்கு பின் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:தமிழகத்தில், 17 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 1,153; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 557 என 1,710 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடக்க உள்ளது.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தமிழகத்தில் டாக்டர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தவறான கருத்து. 1,021 டாக்டர்கள் நியமனத்திற்கான தேர்வு முடிவுகள், ஓரிரு நாளில் வெளியிடப்பட உள்ளன. இதை தொடர்ந்து காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
