UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 09:35 AM
இது குறித்து சங்க தலைவர் நாராயணசாமி விடுத்துள்ள அறிக்கை:
தேசிய மருத்துவ ஆணையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் 100 சதவீத இடங்களையும், மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள அரசு கல்லுாரிகளில் 15 சதவீத இடங்களை யும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு நடத்தி நிரப்பி வந்தது. தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அரசிதழில் மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்கள் தேசிய மருத்துவ ஆணையம் மூலம் கலந்தாய்வு நடத்தி சேர்க்கை நடைபெறும் என அறிவித்துள்ளது. அவ்வாறு சேர்க்கை நடத்தினால் ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைத்து வந்த 64 இடங்கள், மாநில அரசின் எம்.பி.சி., இ.பி.சி., உள்ளிட்ட ஒதுக்கீடு கிடைக்குமா என்ற குழப்பம் உள்ளது.மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் தேசிய மருத்துவ ஆணையம் மூலம் கலந்தாய்வு நடத்தினால், புதுச்சேரி மாணவர்கள் உரிமை பாதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
