UPDATED : ஜூன் 20, 2023 12:00 AM
ADDED : ஜூன் 20, 2023 12:05 PM
அ நிறம் | அளவு
கரூர் அரசு கலைக்கல்லுாரியில் 2023-24ம் ஆண்டுக்காக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம், பி.காம்., பி.காம்.,சி.ஏ., பி.பி.ஏ., ஆகிய பாடபிரிவுகளுக்கும், பி.ஏ., வரலாறு மற்றும் பொருளாதாரம் ஆகிய பாட பிரிவுகளுக்கும், பி.எஸ்.சி., பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடந்தது. நேற்று, மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
