தமிழ் இயக்கம் ஆண்டு விழா அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு
தமிழ் இயக்கம் ஆண்டு விழா அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு
UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 09:58 AM
சென்னை:
சென்னை, சைதாப்பேட்டை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அரங்கில், தமிழ் இயக்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.இதில் அமைச்சர் துரை முருகன், வைரமுத்து, வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விழாவில் அமைச்சர் துரை முருகன் பேசியதாவது:
படிப்பு, வாழ்க்கையில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதை, எனக்குக் கற்றுத் தந்தவர் விஸ்வநாதன். சென்னை, பச்சையப்பன் கல்லுாரியில் நான் படித்தபோது, விஸ்வநாதன் சட்டக் கல்லுாரி மாணவர்.எதைச் செய்தாலும், சிறப்பாகச் செய்யக்கூடிய விஸ்வநாதன், எனக்கு மிக நெருக்கமானவர். கல்வித் துறையிலும், பொருளாதாரத்திலும் வெற்றி பெற்ற மனிதராக இருந்தாலும், எளிமையாகவே வாழ்ந்து வருகிறார்.நம் உள்ளத்தில் நம் தமிழ் மொழி உணர்வோடு உள்ளது. செத்துப்போன மொழிகள் செம்மொழி அடையாளத்துடன் இருக்கும்போது, வாழும் மொழியான தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கேட்டவர் மனோன்மணியம்.நுாறாண்டுக்குப் பின், மனோன்மணியத்தின் லட்சியத்தை நிறைவேற்றி, தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்கச் செய்தவர் கருணாநிதி.இவ்வாறு அவர் பேசினார்.
