UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 12:15 PM
அ நிறம் | அளவு
சில மாநிலங்களில் அதற்கு பின், இணையவழி மற்றும் நேரடி கவுன்சிலிங் வாயிலாக எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிகிறது.இந்த செயல்பாடுகள் ஆணைய விதிகளுக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் புறம்பானவை. இடங்கள் காலியாக உள்ளது என்பதற்காகவே, மாணவர் சேர்க்கைக்கான கால கெடுவை நீட்டிக்க கூடாது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது.எனவே, என்.எம்.சி., அறிவுறுத்தலைமீறி நடத்தப்பட்ட கவுன்சிலிங் செல்லாது. ஒருவேளை மாணவர்களை கல்லுாரிகளில் சேர்த்திருந்தால், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், என தேசிய மருத்துவ ஆணையம், இளநிலை மருத்துவ கல்வி வாரியம் இயக்குனர் சாம்பு சரண்குமார் கூறினார்.
