UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 12:18 PM
அ நிறம் | அளவு
சென்னை:
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவியரில், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாய் இருப்பவருக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பின் போது, மத்திய அரசின் சார்பில் மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.விபரங்களை, www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
