UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 10:34 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
திருப்பூர் சேக்கிழான் எழுதிய, என்றும் வாழும் சனாதன தர்மம், தமிழ் இலக்கியத்தில் செங்கோல் புத்தகங்கள்வெளியிடப்பட்டது.விழாவுக்கு, ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி தலைமை வகித்தார். அறம் அறக்கட்டளை தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னிலை வகித்தனர். அறம் சிந்தனை வட்டம் பக்தவத்சலம் வரவேற்றார்.நுால்களை, எழுத்தாளர் ஜீவானந்தம் வெளியிட, பிரேரணா அறக்கட்டளை செயலாளர் கயிலைராஜன் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் பிரபாகரன், திருப்பூர் ஏங்கர் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் சத்யநாராயணன் ஆகியோர் பேசினர்.
