UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:09 AM
அ நிறம் | அளவு
சென்னை:
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, வரும் 2ம் தேதி மாநிலம் முழுதும் பள்ளிகள் திறந்ததும், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாட புத்தகங்களை வழங்க வேண்டும்.பாடங்களை தாமதமின்றி துவங்கவும், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஜனவரி முதல் வாரத்தில் இருந்தே தொடர்ச்சியாக திருப்புதல் தேர்வுகள் நடத்த வேண்டும். மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த, அரசு மாதிரி பள்ளிகள் மற்றும் எலைட் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
