sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பீகாரில் 92 ஆயிரம் ஆசிரியர் நியமனம்

/

பீகாரில் 92 ஆயிரம் ஆசிரியர் நியமனம்

பீகாரில் 92 ஆயிரம் ஆசிரியர் நியமனம்

பீகாரில் 92 ஆயிரம் ஆசிரியர் நியமனம்


UPDATED : ஆக 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


பாட்னா:
பீகாரில் புதிதாக 92 ஆயிரம் ஆசிரியர்களை பணியமர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, தற்போதுள்ள சட்ட நடைமுறைகளையும் மாற்ற பீகார் அரசு முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து அமைச்சரவை செயலர் கிரிஷ் சங்கர் கூறியதாவது:
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 92 ஆயிரம் ஆசிரியர்களை பணியமர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது. 80 ஆயிரம் தொடக்கக் கல்வி ஆசிரியர்களும், 12 ஆயிரம் நடுநிலை மற்றும் உயர்கல்வி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுவரை கலந்தாய்வு கூட்டங்கள் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது ஆசிரியர்கள் பணி நியமனம் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி விண்ணப்பம் செய்பவர், படிப்பு மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகிய தகுதியின் அடிப்படையில் தீவிர சோதனை செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும், அகில இந்திய அளவில் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் மற்றும் சர்வதேச அறிவியல்சார் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும், தேசிய அளவில் நடத்தப்படும் யு.பி.எஸ்.சி., மற்றும் ஐ.ஐ.டி., போன்ற தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு, ‘பீகார் கவுரவ் சம்மன்’ விருதும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். இவ்வாறு கிரிஷ் சங்கர் கூறினார்.






      Dinamalar
      Follow us