sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல்வர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கு

/

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல்வர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல்வர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கல்லூரி முதல்வர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கு


UPDATED : ஆக 29, 2025 12:00 AM

ADDED : ஆக 29, 2025 08:36 AM

Google News

UPDATED : ஆக 29, 2025 12:00 AM ADDED : ஆக 29, 2025 08:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் யூஜிசி - மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம் சார்பில், யூனியன் பிரதேசத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கான தலைமைத்துவ மற்றும் நிர்வாகத் திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட ஒருநாள் பயிலரங்கு நடைபெற்றது.

பயிலரங்கின் தொடக்க உரையை ஐதராபாத் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அப்பாராவ் பொடிலே வழங்கினார். கல்லூரிகளில் பல்வேறு துறைகளை திறம்பட மேலாண்மை செய்வது, புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்களை அவர் வலியுறுத்தினார்.

புதுச்சேரி அரசு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறை இயக்குநர் திரு அமன் சர்மா, மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் 61.5% விகிதம் கொண்ட புதுச்சேரி இரண்டாம் இடத்தில் உள்ளதாக கூறினார். மேலும், புதுச்சேரியில் 35,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர் என்றும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் பல முயற்சிகளை பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி. பாரதி ஹரிஷங்கர், முதல்வர்கள் இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் மாணவர்களுக்கு திறன் வளர்ச்சி மற்றும் புதிய அறிவு தேடலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு, கல்வி மற்றும் ஆராய்ச்சி வளங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு தெளிவான வாய்ப்புகள் வழங்க முதல்வர்கள் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். பயிலரங்கில் பல முக்கிய தலைப்புகளில் கல்வியாளர்கள் கருத்துக்களை பகிர்ந்தனர், இதில் “அமிர்த காலத்தில் உயர்கல்வி நிறுவனத் தலைவரின் பங்கு” மற்றும் “தேசிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் முதல்வர்களின் பங்கு” போன்றவை இடம்பெற்றன.

பதிவாளர் பேராசிரியர் ரஜ்னீஷ் புடானி நிகழ்ச்சியை நிறைவுறையாற்றி, பங்கேற்ற முதல்வர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பல்கலைக்கழக டீன்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மைய இயக்குநர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us