sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வெயிலில் காக்க வைத்த அதிகாரிகள்; தவித்த மாணவர்கள்

/

வெயிலில் காக்க வைத்த அதிகாரிகள்; தவித்த மாணவர்கள்

வெயிலில் காக்க வைத்த அதிகாரிகள்; தவித்த மாணவர்கள்

வெயிலில் காக்க வைத்த அதிகாரிகள்; தவித்த மாணவர்கள்


UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM

ADDED : ஜூன் 04, 2025 10:34 AM

Google News

UPDATED : ஜூன் 04, 2025 12:00 AM ADDED : ஜூன் 04, 2025 10:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:
நெகிழி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்க 2 மணி நேரம் தாமதாமாகி மாணவர்கள் வெயிலில் நிற்க வைத்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பு செய்துள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்,மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி கல்லூரிகள் இணைந்து நடத்தும் நெகிழி மாசு கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று காலை 8 :00மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.இதில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வெளியே நிற்கவைக்கப்பட்டனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் விழிப்புணர்வுக்காக கையில் வைத்திருந்த மஞ்சள் பைகளை தலையில் வைத்து நின்று கொண்டிருந்தனர். ஊர்வலம் தொடங்க தாமதமானதால் மாணவர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு உள் நிற்க வைக்கப்பட்டனர்.

இதன் பின் 10:00 மணிக்கு கலெக்டர் சரவணன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் தலைமை தபால் நிலையம், திண்டுக்கல், பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட், மணிக்கூண்டு, வெள்ளை விநாயகர் கோயில், ரத வீதி வழியாக மேற்கு தாசில்தார் அலுவலகம் சென்றது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு, தனியார் கல்லுாரிகள் ,செவிலியர் கல்லுாரி ஆகியவற்றிலிருந்து 500க்கு மேற்பட்ட மாணவர்கள் கையில் மஞ்சள் பையுடன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us