பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு நாளை மதியம் வெளியாகிறது
பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவு நாளை மதியம் வெளியாகிறது
UPDATED : ஜூலை 25, 2024 12:00 AM
ADDED : ஜூலை 25, 2024 09:52 AM
 திருப்பூர்: 
பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை (26ம் தேதி) மதியம் வெளியாகிறது. தேர்ச்சி பெறும் மாணவர் கல்லுாரியில் இணைய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த மே, 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியது. மாவட்டத்தில் தேர்வெழுதிய, 23 ஆயிரத்து, 849 பேரில், 23 ஆயிரத்து, 242 பேர் தேர்ச்சி பெற்றனர்; 97.45 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பெற்று பாராட்டு பெற்றது. அசத்தியது. பொதுத்தேர்வில் தோல்வியை தழுவி, தனித்தேர்வர் உட்பட, 986 பேருக்கு, ஜூன், 24 முதல், ஜூலை, 2 வரை துணைத்தேர்வு நடத்தப்பட்டது.
மாவட்டத்தில், 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, தேர்வெழுதினர். இந்நிலையில், பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை (26 ம் தேதி) மதியம், 2:00 மணிக்கு வெளியிடப்படும். www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ரிசல்ட் பக்கத்தில் விவரங்களை அறியலாம். வரும், 29 மற்றும், 30ம் தேதி, தேவையிருப்பின் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு தேர்வுள் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

