UPDATED : ஆக 18, 2025 12:00 AM
ADDED : ஆக 18, 2025 08:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
திருவாரூர் மாவட்டம், நீலக்குடியில், மத்திய பல்கலை இயங்குகிறது. இந்த பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, வரும் செப்டம்பர் 3ம் தேதி நடக்கிறது.
இதில், சிறப்பு விருந்தினராக, ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். 900க்கும் அதிகமான மாணவ - மாணவியருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்கள் வழங்குகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த, மத்திய பல்கலையின் 9வது பட்டமளிப்பு விழாவில், திரவுபதி முர்மு பங்கேற்பதாக இருந் தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது.