UPDATED : ஆக 03, 2026 03:05 PM
ADDED : ஆக 03, 2026 03:06 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
சாணரப்பேட்டை அரசு தொடக்க பள்ளிக்கு, ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி மிட்டவுன் சார்பில், கணினி, அச்சுப் பொறி மற்றும் அவை தொடர்பான சாதனங்கள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை சுமா தலைமை தாங்கினார். ஆசிரியர் புளோரி பிரகதீசுவரன் வரவேற்றார்.
ரோட்டரி சங்க தலைவர் அருண்குமார் அச்சுப்பொறி சாதனங்களை பள்ளிக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் செயலர் தமிழ் செங்கோலன், நிர்வாகிகள் திருமாறன், அருண், கணேஷ், கோவிந்தராஜீலு கலந்து கொண்டனர்.
நல்லாசிரியர் விருதாளர் செந்தில் குமரன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியை சுமிதா நன்றி கூறினார்.
