sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வடமாநில குழந்தைகளுக்கு உதவித்தொகை; தமிழக குழந்தைகளுக்கு பாராட்டு மட்டுமே

/

வடமாநில குழந்தைகளுக்கு உதவித்தொகை; தமிழக குழந்தைகளுக்கு பாராட்டு மட்டுமே

வடமாநில குழந்தைகளுக்கு உதவித்தொகை; தமிழக குழந்தைகளுக்கு பாராட்டு மட்டுமே

வடமாநில குழந்தைகளுக்கு உதவித்தொகை; தமிழக குழந்தைகளுக்கு பாராட்டு மட்டுமே


UPDATED : ஜன 21, 2025 12:00 AM

ADDED : ஜன 21, 2025 10:10 AM

Google News

UPDATED : ஜன 21, 2025 12:00 AM ADDED : ஜன 21, 2025 10:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழக அரசு பள்ளிகளில், ஹிந்தி பாடமோ, ஹிந்தி வழி கல்வியோ இல்லாததால், வட மாநில தொழிலாளர்கள், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயக்கம் காட்டுகின்றனர். இவர்களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்து, தமிழ் படிக்க ஊக்கப்படுத்தும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பீஹார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர், தமிழகம், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வேலைவாய்ப்புக்காக புலம் பெயர்ந்துள்ளனர்.

பெரும்பங்கு

கடந்த, 2014ல், நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தில் மட்டும், 10.67 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிவது கண்டறிப்பட்டது.

அதன்பின், 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஜவுளி, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில், இவர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர், குடும்பத்துடன் தமிழகத்திலேயே தங்கி விட்டனர். இவர்களின் தாய்மொழி ஹிந்தியை படிக்க, தமிழக அரசு பள்ளிகளில் வாய்ப்பில்லாத நிலை உள்ளது.

இதனால், குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க, வட மாநில தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

பல லட்சங்களை கொட்டி, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேர்க்க இயலாத பலரும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், தங்களுடன் உதவிக்கு வைத்துக் கொள்கின்றனர். கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், ஆண்டுதோறும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதில், கடந்த ஏப்ரலில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் அதற்கான காரணங்களை கணக்கெடுத்த போது, அதில் வடமாநில தொழிலாளர்கள் குழந்தைகள் கணிசமாக இடம் பெற்றிருந்தனர்.

இதையடுத்து, வடமாநில குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க, ஊக்கப்படுத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடமாநிலத்தவர்களின் குழந்தைகளுக்கு, தமிழ் மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அவர்களின் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.

இதர சலுகை

அப்படி சேர்ந்து படிக்கும் மாணவர்கள், அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால், உதவித்தொகை, பரிசு மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வடமாநில குழந்தைகளை பள்ளியில் சேர்த்து நன்றாக படித்தால் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசின், பள்ளிக்கல்வித்துறை, தமிழக குழந்தைகளை ஊக்குவிக்க, வெறும் பாராட்டுதலோடு முடித்துக் கொள்கின்றனர்.






      Dinamalar
      Follow us