UPDATED : ஆக 20, 2024 12:00 AM
ADDED : ஆக 20, 2024 09:52 AM
கோத்தகிரி:
கீழ் கோத்தகிரி அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் பி.டி.ஏ., தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்போதைய தலைவர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில், தலைவராக கற்பகம், துணைத் தலைவராக சுலோச்சனா ஆகியோருடன், 24 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பார்வையாளராக பங்கேற்று, பள்ளி மேலாண்மை குழுவின் பணிகள் மற்றும் பள்ளி வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
பி.டி.ஏ., நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் நல்லமுத்து வரவேற்றார். ஆசிரியை பரமேஸ்வரி நன்றி கூறினார்.