UPDATED : பிப் 18, 2026 02:49 PM
ADDED : பிப் 18, 2026 02:51 PM

விருத்தாசலம்:
விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பாரத் விஸ்தார் வரலாற்று வெளியீடு மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி நடந்தது.
நிகழ்ச்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்து, பாரத் விஸ்தார் வரலாற்று வெளியீடு மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் புதிய ரகங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
பேராசிரியர் (உழவியல்) கலைச்செல்வி எண்ணெய்வித்துப் பயிர்களில் உழவியல் தொழில்நுட்பங்கள், களை மேலாண்மை, உரம் மற்றும் சாகுபடி குறிப்புகள் குறித்து பயிற்சி அளித்தார்.
பேராசிரியர்கள் கண்ணன், ஜெயக்குமார் ஆகியோர் எண்ணெய்வித்துப் பயிர்களில் மதிப்பு கூட்டுதல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தனர். மாவட்டத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.

